சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.023
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி பண் - காந்தாரபஞ்சமம் (திருவிற்கோலம் (கூவம்) புராந்தகேசுவரர் புராந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=y6pwZwmsJhI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.023  
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் திருவிற்கோலம் (கூவம்) ; (திருத்தலம் அருள்தரு புராந்தரியம்மை உடனுறை அருள்மிகு புராந்தகேசுவரர் திருவடிகள் போற்றி )
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்; வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய செருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே. | [1] |
சிற்றிடை உமை ஒருபங்கன்; அங்கையில் உற்றது ஓர் எரியினன்; ஒரு சரத்தினால், வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அறச் செற்றவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. | [2] |
ஐயன்; நல் அதிசயன்; அயன் விண்ணோர் தொழும் மை அணி கண்டன்; ஆர் வண்ணம், வண்ணவான்; பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும், செய்யவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. | [3] |
விதைத்தவன், முனிவருக்கு அறம்; முன் காலனை உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தரப் புதைத்தவன்; நெடு நகர்ப்-புரங்கள் மூன்றையும் சிதைத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. | [4] |
முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான், கொந்து உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான், அந்தி வான்பிறையினான், அடியர் மேல் வினை சிந்துவான், உறைவு இடம் திரு விற்கோலமே. | [5] |
தொகுத்தவன், அருமறை அங்கம்; ஆகமம் வகுத்தவன்; வளர் பொழில் கூகம் மேவினான்; மிகுத்தவன்; மிகுத்தவர் புரங்கள் வெந்து அறச் செகுத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. | [6] |
விரித்தவன், அருமறை; விரிசடை வெள்ளம் தரித்தவன்; தரியலர் புரங்கள் ஆசு அற எரித்தவன்; இலங்கையர் கோன் இடர் படச் சிரித்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. | [7] |
திரி தரு புரம் எரிசெய்த சேவகன், வரி அரவொடு மதி சடையில் வைத்தவன், அரியொடு பிரமனது ஆற்றலால் உருத் தெரியலன், உறைவு இடம் திரு விற்கோலமே. | [9] |
சீர்மை இல் சமணொடு, சீவரக் கையர் நீர்மை இல் உரைகள் கொள்ளாது, நேசர்க்கு பார் மலி பெருஞ் செல்வம் பரிந்து நல்கிடும் சீர்மையினான் இடம் திரு விற்கோலமே. | [10] |
கோடல் வெண்பிறையனை, கூகம் மேவிய சேடன செழு மதில் திரு விற்கோலத்தை, நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன பாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே. | [11] |